சாலை அமைக்கும் நிறுவனத்திடம் செய்யூர் விசிக எம்எல்ஏ லஞ்சம் கேட்டதாக வழக்கு.. ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: சாலை அமைக்கும் நிறுவனத்திடம் செய்யூர் எம்எல்ஏ லஞ்சம் கேட்ட வழக்கில், காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்யூர் எம்எல்ஏ பாபு, புத்திரன்கோட்டை பஞ்சாயத்து தலைவர், மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் இந்த விவகாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த டி எஸ் ஆர் சன்ஸ் இண்டியா இன்ஜினியர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் தரப்பில் அதன் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார் தாக்கல் செய்துள்ள வழக்கில், நபார்டு திட்டத்தின் கீழ் ஊரக பகுதியான எம்வி ரோடு முதல் அகரம் பகுதி வரை சாலை அமைக்க நெஞ்சாலை துறை டெண்டர் கோரியது.

இதில் புத்திரன்கோட்டை முதல் மாம்பாக்கம் அகரம் ரோடு வரை இரு சாலைகள் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2023 ம் ஆண்டில் தங்கள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
இந்த சாலை அமைக்கும் பணிகளின் போது அதை செய்ய விடாமல், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பாபு, புத்திரன் கோட்டை பஞ்சாயத்து தலைவர் நிர்மல்குமார், மற்றும் மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ராமைய்யா ஆகியோர் தடுத்து, லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனால் 6 மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகள் ஒரு வருடமாகியும் 50% பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க தனக்கும், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், உபகரணங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு இன்று வந்தது, அப்போது காவல்துறை தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நிறுவனம் அளித்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பின்னர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இது தொடர்பாக செய்யூர் எம்எல்ஏ பாபு, புத்திரன்கோட்டை பஞ்சாயத்து தலைவர், மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
செல்போனில் வந்த மர்ம லிங்கால் 12 லட்சத்தை இழந்த எம்எல்ஏ.. பவன் கல்யாண் ஆதரவாளர் ஏமாந்தது எப்படி -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா











Click it and Unblock the Notifications