குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.. தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. சென்னையிலும் தான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கையின் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இதனால் மீனவர்கள் யாரும் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையின் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications