ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால்.. இந்தியாவின் எரிபொருள் செலவு எவ்வளவு உயரும்?
சென்னை: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் எரிபொருள் செலவு எவ்வளவு கூடும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளார். இது உலக நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக போராக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

இந்தியாவுக்கு கடும் பாதிப்பு?
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியா இறங்கி வரும் என டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால், இந்தியா எதையும் எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஆழமாக இறங்கியுள்ளது. இருப்பினும் இந்த கூடுதல் வரிவிதிப்பு இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய தொழில் அமைச்சகத்தின் கணக்குப்படி, கடந்த 2024-25-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி ரூ.37 லட்சம் கோடி. இறக்குமதி ரூ.60 லட்சம் கோடி. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.7 லட்சம் கோடிக்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 19.7 சதவீதம் ஆகும். தற்போது இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எவ்வளவு பாதிப்பு ஏற்படும்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது விவாத பொருளாகி இருக்கிறது. இருப்பினும் சராசரியாக 30 முதல் 50 சதவீதம் வரை பாதிப்பு இருக்கும் என்று தொழில் அதிபர்கள் கணிக்கிடுகின்றனர். அப்படியானால் தற்போது இருக்கும் ரூ.7 லட்சம் கோடி அமெரிக்கா ஏற்றுமதி மதிப்பு, ரூ.3.5 லட்சம் கோடி வரை ஆகிவிடும்.
இது ஒருபக்கம் இருக்க ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் எரிபொருள் செலவு எவ்வளவு கூடும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவுக்கு நடப்பு நிதி ஆண்டில் மட்டும் கூடுதலாக 9 பில்லியன் டாலர் செலவு ஆகும் என்று ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வெள்யிட்டுள்ள ஆய்வறிககியில் கூறப்பட்டுள்ளது.
10 சதவீதம் விலை உயரும்
அதாவது, நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு ரூ. 76,500 கோடி. அடுத்த நிதியாண்டில், 12 பில்லியன் டாலர். எளிதாக சொல்வது என்றால் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அனைத்து நாடுகளும் நிறுத்தி விட்டு எண்ணெய் வளம் மிக்க நாடுகள் உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications