அதிமுக கோட்டையில் ஓட்டை போட போகும்.. நாம் தமிழர்.. பாஜகவை விடுங்க.. "மைக்" போடும் செம்ம ஆட்டம்!
சென்னை:2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிமுகவின் வாக்கு வங்கியை வெகுவாக பிரிக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் தமிழர் சில முக்கியமான தொகுதிகளில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எம்பி சீட்டுகளை பெறவில்லை என்றாலும் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சிகளை நாம் தமிழரே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடையே பேசிய அரசியல் கள வல்லுனர்கள், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக வாக்குகள் பிரியும். எடப்பாடி ஒரு பக்கம் வாக்குகளின் ஷேரை எடுப்பார். ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் குறைந்தபட்ச ஷேரை எடுப்பர். நாம் தமிழர் சீமானும் அதிமுக வாக்குகளை பிரிப்பார்.
ஜெயலலிதா இருந்த போது 1 சதவிகித வாக்குகளை மட்டுமே சீமான் எடுத்தார். ஆனாலும் ஜெயலலிதா இருந்த போது எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை விட அதிக கூட்டத்தை ஈர்த்தது சீமான்தான். இனப்பிரச்சனை தொடங்கி தமிழர் பிரச்சனை வரை பல விஷயங்கள் பற்றி சீமான் பேசி வருகிறார். ஜெயலலிதாவும் ஈழப்பிரச்சினை பற்றி பேசினார். ஆனால் இப்போது எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இதை பற்றி பேசுவது இல்லை.
2021ல் சீமான் 7 சதவிகித வாக்குகளை பெற்றார். ஆனால் ஜெயலலிதா இருந்த போது அதிமுக 41 சதவிகித வாக்குகளை பெற்றது. அதுவே எடப்பாடி - ஓபிஎஸ் கீழே இந்த வாக்குகள் 33 சதவிகிதமாக குறைந்தது. எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழரின் மொழி சார்ந்த பிரச்சனைகளை பேசுவது இல்லை. அதுவும் இதற்கு காரணம். கடந்த முறை சீமானுக்கு ஒரு பூஸ்ட் கிடைத்தது.
அது இந்த முறை கண்டிப்பாக அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் கள வல்லுனர்கள். அதாவது, அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளது. வாக்கு பிரியும். தற்போது இவர்கள் இருவரின் மோதல் காரணமாக மீண்டும் சீமானுக்கு பூஸ்ட் கிடைக்கும். அதோடு சீமான் ஆதி தமிழருக்கு தனி தொகுதி இல்லை, இஸ்லாமிய சிறை கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்று சீமான் பேசுகிறார். இப்படி சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் சீமான் பேசுகிறார்.
அதிமுக செய்ய வேண்டியதை சீமான் செய்கிறார். அவர்களின் வாக்குகளை சீமான் பிரிக்க வாய்ப்புகள் உள்ளன. சிஏஏ பற்றி சீமான் தெளிவாக பேசுகிறார். எடப்பாடி மாறி மாறி நிலைப்பாடு எடுக்கிறார். அதிமுக பிளவால் தமிழ் தேசியம் கண்டிப்பாக பலன் அடையும். இந்த பிளவு சீமானுக்கும் ஒரு பூஸ்ட் கிடைக்கும்.
அதேபோல் இந்துத்துவா அமைப்புகளுக்கும் இந்த பிளவால் பலன் கிடைக்கும். அதிமுகவிடம் இருந்து ஒரு வாக்கு வங்கியை இந்துத்துவா அமைப்புகள் எடுக்கும். அதாவது பாஜக கூட்டணி எடுக்கும். ஜெயலலிதா ஒரு வித இந்துத்துவா சார்பை கொண்டு இருந்தார். இப்போது அவர் இல்லாததால் அந்த வாக்குகள் இந்துத்துவா அணிகளுக்கு செல்லும். அதுவே அதிமுகவிற்கு சென்ற குறைந்தபட்ச இஸ்லாமிய, சிறுபான்மையின வாக்குகள் நாம் தமிழருக்கு செல்லும், என்று கள அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவிற்கு சென்ற வாக்குகள் கட்சி பிளாவால் கொஞ்சம் நாம் தமிழர் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி இல்லாததால் எதிர்க்கட்சி வாக்குகளை நாம் தமிழர் பிரிக்கும் திமுக மீது நேரடி அட்டாக் காரணமாக திமுக அதிருப்தி வாக்குகள் சில நாம் தமிழருக்கு செல்லும் சிறுபான்மையினர், தலித் மக்கள் சிலர் திமுகவிற்கு மாற்றாக நாம் தமிழரை கருதுவது சாதகமாக அமையும், என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
சின்னம் விவகாரம் மட்டுமே நாம் தமிழருக்கு எதிராக இருக்கும். மற்றபடி வேறு பிரச்சனை இருக்காது என்கிறார்கள் கள வல்லுனர்கள்.
இந்த 10 தொகுதிகளில் ஏற்கனவே திமுக - பாஜக - அதிமுக இடையே கடுமையான போட்டிகள் உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கும் சில இடங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.
இதனால் சில இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் கட்சியாகவும், சில இடங்களில் இரண்டாம் இடங்களை தீர்மானிக்கும் கட்சியாகவும் நாம் தமிழர் இருக்க போகிறது.
2019 தேர்தல் வரலாறு: திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.
நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications