நவ 27, 28- இல் சென்னைக்கு மிக கனமழை.. இன்னும் லிஸ்ட்டில் இருக்கும் மாவட்டங்கள் என்ன?.. வானிலை மையம்
சென்னை: சென்னையில் நவம்பர் 27, 28 ஆகிய இரு நாட்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, பலர் வீடுகளையும் உடமைகளையும் இழந்து வருகிறார்கள்.
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி
இடுப்பளவு தண்ணீரால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்.
தென்மேற்கு வங்கக் கடல்
இந்த நிலையில் வங்கக் கடலில் மீண்டும் தென் மேற்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தீவிரமடைந்துள்ளது. இது புயலாக மாறாது என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் மேலும் மேலும் மழை பெய்வதால் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
இரு நாட்கள்
இந்த நிலையில் 27 மற்றும் 28 ஆம் தேதி மழை குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வரும் 27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். மயிலாடு துறை, திருவாரூர், நாகை, தஞ்சை, காரைக்கால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம்
அது போல் வரும் 28ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அது போல் விழுப்புரம் , புதுவை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது.
திருவள்ளூர்
அதாவது 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மக்களுக்கு மேலும் கவலை தொற்றிக் கொண்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த தண்ணீர் வடியாததால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.