எகிறிய தங்கம் விலை.. அட்சய திரிதியையொட்டி இன்று 3வது முறையாக விலையேற்றம்.. மக்கள் ஷாக்
சென்னை: அட்சய திருதியை நாளான இன்று பொதுமக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகைக்கடைகளில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் இன்று ஒரே நாளில் 3வது முறையாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க செல்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நம் நாட்டில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. நம் நாட்டை பொறுத்தவரை தினமும் தங்கம், வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலை என்பது நாள்தோறும் மாறிமாறி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று அட்ஷய திருதியை நாளாகும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது செல்வத்தை பெருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
அதற்கு இன்றைய தினமும் விதிவிலக்கல்ல. இன்று காலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கியது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 52,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அட்சய திரிதியை நாளான இன்று காலை முதலே தங்கத்தின் விலை ஏற்றம் காண தொடங்கியது.
பொதுவாக தங்கத்தின் விலை என்பது காலை 10 முதல் 11 மணிக்கு தான் மாற்றம் செய்யப்படும். ஆனால் இன்று காலையில் கூட்டம் அதிகரித்த நிலையில் தங்கத்தின் விலை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை காலை 6.15 மணிக்கு ரூ.45ம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்தது. இதனால் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.53,280 ஆக விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.6,660க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பிறகு அடுத்த சில மணிநேரங்களில் மீண்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 உயர்த்தப்பட்டது. இதனால் சில மணி நேரங்களிலேயே தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டது. காலையில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், மீண்டும் ரூ.360அதிகரித்து. இதனால் ஒரு சவரன் ரூ.53,640க்கு விற்பனையானது.
அதன்பிறகு இன்று மாலையில் மீண்டும் தங்கத்தின் விலை 3வது முறையாக அதிகரித்தது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65ம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520ம் அதிகரித்தது. இந்த 3வது முறை விலையேற்றத்தில் தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.54,160க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு முதலில் 360, 2வது 360, 3வது 520 என மொத்தம் 3 முறைகளில் ரூ.1,240 வரை விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
தங்கம் விலை காலி.. 1983க்குப் பிறகு நடக்காத மிகப்பெரிய சம்பவம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம்












Click it and Unblock the Notifications