Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!இதையெல்லாம் செய்ய கூடாது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியாவின் லோக்சபா தேர்தல் குறித்த தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போலவே, இந்த ஆண்டும், நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது.

In Tamilnadu nomination papers will start tomorrow and the guidelines have been released


இதில், முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டமாக 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. முன்று கட்டங்களாக 12 மாநிலங்கள் 94 தொகுதிகளிலும், நான்கு கட்டமாக 10 மாநிலங்கள் 96 தொகுதிகளிலும், ஐந்து கட்டமாக 8 மாநிலங்கள் 49 தொகுதிகளிலும்,ஆறு கட்டமாக 7 மாநிலங்கள் 57 தொகுதிகளிலும், ஏழு கட்டமாக 8 மாநிலங்கள் 57 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கும், வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி என மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்.

மேலும், “சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களானது நாளை (20.03.2024) முதல் 27.03.2024 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) ஆகிய நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கீழ்க்கண்ட அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும்.

நாளை முதல் வரும் 27ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மனுவை திரும்பப்பெறுவதற்கு மார்ச் 30ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்களானது மேற்கண்ட நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பெறப்படும். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு செய்ய அனுமதிக்கப்படுவர். வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3.00 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை” என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+