அதிகாலையிலேயே வந்த வருமான வரித்துறை அதிகாரிகள்.. சென்னையில் 5 இடங்களில் அதிரடி ரெய்டு.. என்ன மேட்டர்
சென்னை: தலைநகர் சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வரி ஏய்ப்பு செய்வோர் முறையான வருமான வரியைத் தாக்கல் செய்யும் நிறுவனங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாகச் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களைக் குறிவைத்தும் ரெய்டு நடத்தப்படுவது வழக்கம். முறையான ஆவணங்கள் உள்ளதா.. இல்லை அந்த நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டு இருக்கிறதா என்பதை ரெய்டில் கண்டுபிடிப்பார்கள்.
அப்படிதான் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு ஒன்றை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காலையில் கார் மூலம் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.. எதற்காக இந்த ரெய்டு நடைபெறுகிறது என்பது குறித்தோ இல்லை எங்கிருந்து கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த ரெய்டு நடக்கிறது என்பது குறித்தோ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சோதனை முழுமையாக நடந்து முடிந்த பிறகு ரெய்டு குறித்த தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications