ஒரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி.. மறுபக்கம் தமிழக அமைச்சர் திருமண மண்டபத்தில் வருமான வரி சோதனை
சென்னை: மத்தியில் ஆளும் பாஜகவோடு, அதிமுகவுக்கு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்ட நிலையில், மற்றொருபக்கம் தமிழக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாராமமூர்த்தி ரெட்டியார் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல பால் பொருள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஒரு நிறுவனத்திலும் ரெய்டுகள் நடக்கின்றன.ஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் அவ்விரு கட்சிகளும் இணைந்து இறங்காகிவிட்டது. இந்த நிலையில், மூத்த அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல வேலூரில் ராமமூர்த்தி ரெட்டியார் மற்றும் ஜெயப்பிரகாஷ் என்பவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் பால் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிலும், ஆந்திராவை சேர்ந்த தமிழகத்தில் செயல்படும் நிறுவனம் ஒன்றிலும் இன்று வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த அமைச்சர், இன்று சென்னையில்தான் உள்ளாராம். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications