இன்றும் உயர்த்தப்பட்ட விலை.. பெட்ரோல், டீசல் விலை 15 காசுகள் உயர்வு.. தமிழகத்தில் நிலவரம் என்ன?
சென்னை: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரங்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்கும். மற்ற நாட்களாக தினமும் இதன் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சமயங்களில் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. 5 மாநில சட்டசபை தேர்தலின் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் தினமும் இதன் விலை உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 94.86 ஆக உள்ளது. டீசல் விலை 15 காசுகள் உயர்ந்தது. சென்னையில் டீசல் விலை ரூ. 88.87 ஆக உள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை 93.15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 83.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 96.85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 91.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 96.29 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.99 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 99.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 91.16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.