சூப்பர்.. 1 லட்சம் அடிக்கு மேலே.. மூவர்ணக் கொடியை விண்வெளியில் பறக்கவிட்ட 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'!
சென்னை: இந்திய சுதந்திர தினத்தையொட்டி 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு நமது தேசியக் கொடியை பூமிக்கு அப்பால் சுமார் 1 லட்சம் அடிக்கு மேலே பறக்க விட்டுள்ளது.
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றி மாணவர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன. அந்தந்த மாநில முதல்வர்கள் தலைமைச் செயலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தனர். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையை ஆற்றினார்.

இந்நிலையில், பூமியில் மட்டுமல்லாமல் விண்வெளியிலும் நமது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆம், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு சார்பில் ராட்சத பலூனில் நமது தேசியக் கொடி வைத்து அனுப்பப்பட்டது. அந்தக் கொடி பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி மேலே சென்ற போது பலூன் மூலமாக தேசியக் கொடி அவிழ்த்துவிடப்பட்டு பறக்கவிடப்பட்டது. மூவர்ணக் கொடி விண்வெளியில் பட்டொளி வீசி பறக்கும் காட்சியை 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' தனது யூடியூப் சேனலிலும் வெளியிட்டுள்ளது.
இதற்காக அந்த அமைப்புக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதனிடையே, இந்திய சுதந்திர தினத்துக்கு விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி பணிபுரிந்து கொண்டிருக்கும் இத்தாலி நாட்டின் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபொரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "76-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு எனது வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல, நாசாவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரியும் இந்திய சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்பது இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் அமைப்பு ஆகும். பள்ளி மாணவர்களிடத்தில் விஞ்ஞானம் குறித்த புரிதலை ஏற்படுத்தி விண்வெளி சம்பந்தமான விழிப்புணர்வை இந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் 750 அரசுப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆஸாதிசாட் எனற எடைக்குறைந்த செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலமாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது. ஆனால், அந்த ராக்கெட் சரியான வட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தாமல் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications