போதும்.. இனியும் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை சொல்லாதீங்க.. கார்த்தி சிதம்பரம் ஒரே போடு
சென்னை: வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்காதீர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோக்சபா உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இந்த குற்றச்சாட்டை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
டுவிட்டரில் அவர் இதுபற்றி கூறுகையில், தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டிய காலகட்டம் இது. எனது அனுபவத்தில் மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் துல்லியமானது, நம்பகத் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட கருத்துக்கள்
எதிர்கட்சி நெட்டிசன்கள் சிலரும் கூட வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழிபோட்டு, பாஜகவின் திட்டமிட்ட உழைப்பை நாம் மறுப்பதால்தான் தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டு இருக்கிறோம் என கூறுவதை பார்க்க முடிகிறது.

காரணங்கள் இதுதான்
பாஜக சிறப்பாக திட்டமிடுகிறது, அதன் தொண்டர்கள் தீவிரமாக உழைக்கிறார்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளில் பெரிய தலைவர் கிடையாது என்ற சூழ்நிலை நிலவுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், வாக்குப்பதிவு இயந்திரத்தை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு பொறுப்பை தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவதையும் பார்க்க முடிகிறது.

இடைத் தேர்தல்கள்
பீகார் தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தல்கள் என அனைத்திலும் பாஜக கூட்டணி முன்னிலையில் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி, எதிர்க்கட்சியை சேர்ந்த சில ஆதரவாளர்கள் சந்தேகங்களை கிளப்பிய நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications