கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்
Recommended Video
சென்னை: கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான். இதனால் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன.
தேர்தல் என்றாலே ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் பிரசாரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு எதையும் எழுதி வைத்துக் கொள்ளாமல் புள்ளி விவரங்களுடன் பேசுவதில் இருவரும் வல்லவர்கள்.
திமுக என்றால் அது கருணாநிதி, அதிமுக என்றால் அது ஜெயலலிதா என்ற பிம்பம் ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலித்தது.

வாக்காளர்கள்
அதிமுக இரண்டாக பிளவானபோது கூட சசிகலாவுக்கு ஆதரவு தரக் கூடாது என்ற பேச்சு வரும்போது பெரும்பாலான வாக்காளர்கள் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு சசிகலாவுடன் இணைய வேண்டும். ஓபிஎஸ்ஸுடன் சேருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

ஜெ. முகம்
அப்போது அவர்களிடம் எகிறிய எம்எல்ஏக்கள், ஓட்டு போட்டதுடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என கூறினர். அதற்கு மக்களோ உங்கள் முகத்தை பார்த்து நாங்கள் போடவில்லை. ஜெயலலிதாவின் முகத்தை பார்த்துதான் ஓட்டு போட்டோம் என்றனர். அந்த அளவுக்கு அதிமுக, இரட்டை இலை என்றால் அது ஜெயலலிதா என்ற ஒரு பிம்பம் வந்துவிட்டது.

ஸ்டாலின்
கருணாநிதியின் மீது தொண்டர்களுக்கு பற்றும் பாசமும் இருந்தபோதிலும் அவர் இருக்கும் போதே அனைத்தும் ஸ்டாலின் என்றாகிவிட்டது. கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது கூட ஸ்டாலின்தான் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.

சூழல்
தற்போது இருவரும் இல்லாத சூழலில் மக்களின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த தேர்தல் மூலம் அதிமுகவுக்கு ஒரு பிம்பம் கிடைக்கிறதா என்பதையும் தமிழகம் உற்று நோக்கி வருகிறது. சுருக்கமாக சொல்ல போனால் திமுக, அதிமுகவுக்கு இது ஆசிட் டெஸ்ட் போன்றதாகும்.

முக்கியம்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று முதல் முறையாக பொதுத் தேர்தலை சந்திக்கிறார். இதனால் இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications