புதிய ஆரம்பத்தின் அடையாளம்.. இது மக்கள் தீர்ப்பு.. கமல் அதிரடி கருத்து
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து ஒரே வரியில் டுவீட் போட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
ராஜஸ்தான், மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
இந்த வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு தாமதமாகும் என்கிற போதிலும் ஓரளவுக்கு எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்றதை விட பாஜக தோல்வியை கொண்டாடி வருகிறது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது.
— Kamal Haasan (@ikamalhaasan) December 11, 2018
அவ்வப்போது பாஜகவின் மக்கள் விரோத போக்கை கமல் கண்டித்து வருகிறார். இந்த நிலையில் 5 மாநில தீர்ப்பு குறித்து ஒரு வரியில் கருத்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.