Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி எப்படி ஜெயிப்பாரு? பிரசாந்த் கிஷோரை தண்ணி குடிக்க வைத்த கரண் தாப்பர்.. திமுக சொன்னதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் அவரிடம் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த வீடியோவை திமுக மூத்த நிர்வாகிகள் பகிர்ந்து வருகின்றனர்.

2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனது கணிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், என்னைப் பொறுத்த வரையில், நான் சொல்ல போகும் பதில் சில சமயங்களில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன். கடந்த ஐந்து மாதங்களாக, நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்தாலும், மோடி தலைமையிலான பாஜக திரும்பி வருவதாகத் தெரிகிறது. கடந்த 5 மாதங்களாக அதுதான் நிலவரம்.

Karan Thapar made Prashant Kishor drink water DMK questions his prediction on Lok Sabha elections

அது அப்படியே திடீரென மாற்றம் அடையாது. மோடிதான் திரும்ப வரப்போகிறார். கடந்த தேர்தலின் அதே எண்ணிக்கையை அவர்கள் பெறலாம் அல்லது அதைவிட சற்று சிறப்பாக செயல்படலாம்.

இதுதான் முடிவாக இருக்க போகிறது. நாம் அடிப்படைகளை பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் மீதும் அதன் தலைவர் மோடி மீதும் கோபம் இருந்தால் ஆட்சி இருக்கும். ஆனால் அந்த சூழ்நிலை இப்போது இல்லை.

மோடிக்கு எதிராக மக்களிடம் மாற்றுக்கருத்து இருக்கிறதா என்பதைப் பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. சில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யலாம். ஆனால் மோடிக்கு எதிரான அலை இல்லை. இதுவரை, மோடிஜி மீது மக்களிடையே பரவலான கோபம் இருப்பதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் முன்பை விட கூடுதல் இடங்களை கூட பெற்று அவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

கரண் தாப்பர் கேள்வி: பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் அவரிடம் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினீர்கள், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வேரோடு அறுக்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால் இரண்டிலும் காங்கிரஸ் வென்றது.

இப்போது பாஜக வெல்லும்.. மோடி வெல்ல வாய்ப்புள்ளது என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கரண் தப்பார் கேட்டுள்ளார். இதற்கு கோபம் அடைந்த பிரசாந்த் கிஷோர்.. கடுப்பாகி உங்களிடம் ஆதாரம் இருக்கா.. வீடியோ இருக்கா என்று மீண்டும் மீண்டும் சொல்லி உள்ளார்.

இதையடுத்து பிரசாந்த் கிஷோர் பேசிய பேட்டிகளை தேதி வாரியாக கரண் தாப்பர் குறிப்பிட்டு அதை காண்பித்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோவை திமுக மூத்த நிர்வாகிகள் பகிர்ந்து வருகின்றனர்.

சரவணன்: திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள போஸ்டில், கரண் தாபர் அவர்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட பிரஷாந்த் கிஷோர்.

இனி எங்கேயும் சென்று பாஜக 300 இடங்களில் வெல்லும், மோடி தான் அடுத்த பிரதமர் என சொல்லுவாரா பார்ப்போம். "கோடி மீடியா" என ஏன் சொல்லுகிறோம்? இப்படியொரு கேள்வியை 300 இடங்கள் என்னும் பொழுது கேட்டார்களா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+