அப்போ எனக்கு 10 வயசு இருக்கும்! மேல்மருவத்தூர் அருகே கார் பழுதாகி நின்றது! -கார்த்திகேய சிவசேனாபதி
சென்னை: பங்காரு அடிகளார் மறைந்த நிலையில் அவரை முதல் முறையாக தாம் எப்போது பார்த்தேன் என்பதையும் அதற்கான சூழல் எப்படி அமைந்தது என்பது குறித்தும் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சுவாரஸ்ய பிளாஷ்பேக் பகிர்ந்துள்ளார்.
கார் பழுது: ''1980 களில் சுமார் எனக்கு 10 வயது இருக்கும் அம்மா, அப்பா, நான் தம்பி அத்தை பொண்ணு அக்கா என 5 பேரும் ஒரு (மோரிஸ் மைனர்) மகிழுந்தில் எங்கள் கிராமத்திலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். அப்படிச்சென்று கொண்டிருக்கும் போது மேல்மருவத்தூர் அருகே சென்ற பொழுது நாங்கள் சென்ற மகிழுந்து பழுதானது. பின்பு பழுது நீக்கும் பணிமனையில் வண்டியை விட்டு விட்டு அக்காலகட்டத்தில் அங்கு தங்குவதற்கு எந்த வசதிகளும் இல்லாத காலகட்டம்.''

பங்காரு அடிகளார்: ''இன்று போல் அல்லாமல் அந்தச் சாலைகளின் இரண்டு பக்கமும் பனை மரங்களும், ஒரு வழி சாலையாகத் தான் இருக்கும். இன்று இருக்கக்கூடிய சென்னை -திண்டிவனம் சாலையை நாம் கனவில் கூட அன்று கண்டிருக்க முடியாது. பங்காரு அடிகளார் அவர்களுக்கு தாத்தாவை நன்கு தெரியும் என்று எனது தந்தை கூறியதால் அருகில் இருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று அவரை சந்தித்தோம். இரவு 9 மணிக்கு சென்ற எங்களை வரவேற்று, அவருடைய வீட்டுக்கு அருகே இருந்த விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்தார்.''
மேல்மருவத்தூரில் டிஃபன்: ''அடுத்த நாள் காலை எழுந்து நாங்கள் எல்லாம் அவருடன் சிற்றுண்டி உண்டு விட்டு காலை சுமார் 11 மணிக்கு எங்களுடைய மகிழுந்து பழுது பார்க்கபட்டு பயணத்திற்கு தயாரானது. மறுபடியும் அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்று சென்னைக்கு கிளம்பினோம். இதை எதற்காக இப்பொழுது குறிப்பிடுகிறேன் என்றால் இப்படி ஒரு சாதாரண மனிதராக எந்த விதமான பாரபட்சமின்றி ஆண், பெண் மற்றும் சாதி ,மத பேதமின்றி ஒரு புதுமையான வழிபாட்டு முறையை உருவாக்கியவர் அடிகளார். ''
அற்புதமான வழிபாட்டு முறை: ''கோயில் எல்லோரும் கருவறைக்குள் செல்ல முடியாது என இருந்தகாலகட்டத்தில், யார் வேண்டுமானாலும் சென்று அம்மனை வழிபட முடியும் என்ற அற்புதமான ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கியவர் அடிகளார் அவர்கள். அவருடைய மறைவுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.''
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications