கட்சியில் சேர்ந்து 3 நாட்களிலேயே வேட்பாளர் நேர்காணல் நடத்திய கோவை சரளா..!
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து 3 நாட்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் வேட்பாளர் நேர்காணலில் கோவை சரளாவை கமல்ஹாசன் உட்கார வைத்தது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை கோவை சரளா சேர்ந்து மூன்று நாட்கள் தான் ஆகியிருக்கிறது. ஆனால் முப்பது ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளதைப் போல் வேட்பாளர்களை நேர்காணல் நடத்தும் குழுவில் இடம்பிடித்துவிட்டார் கோவை சரளா.

மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கியுள்ளார் கமல். தனக்கு உதவியாக ஊடகவியலாளர் மதன், கல்வியாளர்கள், உள்ளிட்ட குழுவையும் கமல் நேர்காணல் நடத்தும் போது தன்னுடன் அமர வைத்துள்ளார்.
அந்தக் குழுவில் மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த கோவை சரளாவும் இடம்பிடித்தது தான் கமல் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

இதுவரை நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி முடித்து நல்ல நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் எனக் கூறப்படுகிறது.
வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல ஜாதி என்ன, எவ்வளவு செலவழிப்பீங்க, ஜெயிப்பீங்களா என்று மொக்கையாக கேள்வி கேட்டு கடுப்படிக்காமல் வித்தியாமான முறையில் வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறார் கமல்ஹாசன். இதற்காகவே அவரது கட்சி வேட்பாளர்கள் குறித்து அறிய மக்களிடையே தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications