தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிப்பு.. 5 மாவட்டங்களில் முழு லாக்டவுன்!
சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பழைய தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கி தொடர்ந்து லாக்டவுன் அமலில் உள்ளது. எனினும் கடந்த மே மாதமும் ஜுன் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களும் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
மண்டலத்திற்குள் செல்ல இபாஸ் தேவையில்லை, பேருந்துகள் இயக்க அனுமதி, கடைகளை வழக்கம் போல் திறக்க அனுமதி என கிட்டத்திட்ட இயல்பு நிலையை தமிழகம் எட்டியது.

பிற மாவட்டங்களில்
ஆனால் சென்னையில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்ததால் பலரும் அச்சப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு பிற மாவட்டங்களிலும் பரவலாக அதிகரித்தது. இந்நிலையில் ஜூன் 3வது வாரத்தில் பல மாவட்டங்களில பாதிப்பு கடுமையாக உயர்ந்தது.

ஜூன் 30 வரை
இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்தார். இந்த ஊரடங்கு ஜுன் 30 வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இதேபோல் மதரை, தேனி, மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும், மண்டலங்களுக்கு இடையிலான, பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு, நாளை நிறைவு பெறுகிறது.

மருத்துவக்குழு உடன்
இந்நிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.

லாக்டவுன் நீட்டிப்பா
அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக்குழுவினருடன் முதல்வர் பழனிச்சாமி இன்று காலை 10 மணி முதல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மருத்துவக்குழுவினர் பல்வேறு பரிந்துரைகளை அளித்ததாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கை எவ்வளவு நாட்கள் நீட்டிப்பது, எந்த மாவட்டத்திற்கு தளர்வுகளை அறிவிப்பது, எங்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என்பது குறித்து முதல்வர் மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சற்று முன்னதாக நிறைவு பெற்றது. முதல்வர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

லாக்டவுன் நீட்டிப்பு
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பழைய தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications