‛‛மூக்கை துளைத்த அதிரச வாசனை’’.. பிரசார வாகனத்தில் நின்று தமிழிசை செய்ததை பாருங்க! ஒரே கலகலப்பு
சென்னை: தென்சென்னை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் பிரசாரத்துக்கு நடுவே வந்த அதிரச வாசனைக்கு பிறகு நடந்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தென்சென்னை லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் எம்பியுமான ஜெயவர்த்தன் களமிறங்கி உள்ளார்.

பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல் சீமானின் நாம் தமிழர் சார்பில் தமிழ் செல்வி களமிறங்கி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை லோக்சபா தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தொகுதியிலேயே முகாமிட்டு அவர் வெற்றி பெறும் நோக்கத்தில் வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்றைய தினம் தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட தியாகராயநகரில் நல்லாங்குப்பம் பகுதியில் வழக்கம்போல் பிரசாரம் செய்தார்.
திறந்த வாகனத்தில் நின்றபடி தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். வரும் லோக்சபா தேர்தலில் தனக்கு பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறினார். இந்த சமயத்தில் வீட்டில் சுடச்சுட அதிரசம் தயாராகி வந்தது. இதையடுத்து பிரசார வாகனம் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த 3 பெண்களில் ஒருவர் தான் தயாரித்த அதிரசத்தை பேப்பரில் எடுத்து வந்து சிரித்த முகத்துடன் பிரசார வாகனத்தில் நின்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கினார்.
அதனை புன்னகையுடன் தமிழிசை சவுந்தரராஜன் பெற்று கொண்டு ருசித்தார். மேலும் எவ்வளவு பணம்? என கேட்டார். அதற்கு அந்த பெண் பணம் வேண்டாம் எனக்கூறினார். இந்த வேளையில் தமிழிசை சவுந்தரராஜன், அதிரசம் அளித்த பெண்ணிடம், ‛‛ரொம்ப சந்தோஷம். எதுக்கு நின்னேன் என்றால் உங்கள் அதிரசத்தின் வாசனை மூக்கை துளைத்தது. அதனால் தான் நின்னேன். ரொம்ப சந்தோஷம்'' எனக்கூறினார். தமிழிசை சவுந்தரராஜனின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு பிரசாரத்தை கலகலல்பாக்கியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதுதவிர தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பங்களில் பல வேட்பாளர்களும் டீ போடுவது, தோசை சுடுவது, பரோட்டோ போடுவது, பஜ்ஜி, வடை என சமைத்து அசத்தி வருகின்றனர். இப்படியாக தமிழ்நாட்டில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications