லோக்சபா தேர்தல்.. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு.. அதிமுக சார்பில் போட்டியிட முடிவு!
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார்.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக அதிமுக மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது. லோக் சபா தேர்தலில் வெவ்வேறு பணிகளை செய்வதற்காக மூன்று புதிய குழுக்களை அதிமுக கட்சி உருவாக்கி இருக்கிறது.
அதேபோல் அதிமுக மிகவும் ரகசியமாக சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணி குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்நிலையில் 40 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்கள் நேற்றில் இருந்து பெறப்பட்டு வருகிறது. வரிசையாக பலர் அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார். ஆனால் இவர் எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இவர் அதிமுகவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறார்.
இவர் பெரும்பாலும் தேனி அல்லது அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த மனுக்கள் மீதான முடிவு வரும் 10ம் தேதிக்கு பிறகே எடுக்கப்படும். கூட்டணி அறிவிப்பு வெளியான பின்பே அதுகுறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
அதிமுகவில் நேற்றும் இன்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள்தான் அதிக மனுக்கள் அளித்தனர். இன்று காலையில் இருந்து 20க்கும் அதிகமானோர் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.