வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மாவட்ட நீதிபதிகளுடன் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
சென்னை: ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணையை மேற்கொள்வது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்..
ஊரடங்கு உத்தரவின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகிறது. இமெயில் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தபடியே நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகி உடன் நேரில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட தற்போது உள்ள நிலைமையை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை மட்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் தொடர்ந்து தலைமை நீதிபதி மற்றும் நிர்வாகக் குழு நீதிபதிகள் அடங்கிய குழு மாவட்ட நீதிபதிகளுக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ந்து நீதிமன்றத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
நாளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனை நடத்திய பின்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழகத்தில் நீதிமன்றங்கள் செயல்படுவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications