Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினை சந்தித்த மகாராஷ்டிரா ‘புள்ளி’! நெகிழ்ச்சி “பரிசு”.. டக்கென திரும்பிய பாஜக! 2024க்கு பிளானா?

மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே இன்று சந்தித்தார்.

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுக்கு எதிரான பலமான கூட்டணியை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சிவசேனா

சிவசேனா

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் இணையத் திட்டமிட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த சிவசேனா, திடீரென காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அணி உருவானதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

ஆதித்ய தாக்கரே

ஆதித்ய தாக்கரே

தற்போது பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், பாஜக மீது கடுமையான எதிர்ப்பு மனநிலையில் உள்ளது உத்தவ் தாக்கரே தரப்பு. இதனால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார் உத்தவ் தாக்கரே. இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே இன்று சென்னைக்கு வருகை தந்தார்.

உதயநிதியும்

உதயநிதியும்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் ஆதித்ய தாக்கரே. இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவசேனா எம்.பி அனில் தேசாய், திமுக முன்னாள் எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை பாராட்டியுள்ளார் ஆதித்ய தாக்கரே.

கொடுத்த பரிசு

கொடுத்த பரிசு

இந்தச் சந்திப்பின்போது கருணாநிதியும், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவும் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் ஆதித்ய தாக்கரே. அதேபோல, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய 'Karunanidhi : A life' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதித்ய தாக்கரேவுக்கு பரிசாக அளித்தார்.

அரசியல் பரபரப்பு

அரசியல் பரபரப்பு

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார் ஆதித்ய தாக்கரே. திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலினுடன் சிவ சேனாவின் ஆதித்ய தாக்கரே நடத்திய திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

ஸ்டாலின் முயற்சி

ஸ்டாலின் முயற்சி

இந்த சந்திப்பு 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியின் ஒரு கட்டமா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு, பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படியான சந்திப்பு நடந்துள்ளது பாஜக டெல்லி தலைமையையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+