கூட்டணியை பற்றி பேச பொன்.ராதா யார்...? அவருக்கு என்ன பவர் உள்ளது...? கே.பாலகிருஷ்ணன் கேள்வி..!
சென்னை: கூட்டணியை பற்றி பேச பொன்.ராதாகிருஷ்ணன் யார் என்றும் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வினவியுள்ளார்.
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்போது சிலர் கிளம்பியுள்ளதாகவும் விமர்சித்தார். திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறக்கூடும் என பொன்.ராதாகிருஷ்ணன் எதன் அடிப்படையில் கூறினார் என தனக்கு புரியவில்லை என்றும் அவர் என்ன பாஜக மாநிலத் தலைவரா எனவும் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பது தான் களநிலவரம் என்றும் அது புரியாமல் பாஜக பேசிக்கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் எந்தக் கட்சியும் பாஜகவுடன் சேரத் தயாராக இல்லை எனக் கூறினார்.
கடந்த ஆறரை ஆண்டு கால மோடி ஆட்சியால் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர் மத்திய அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் கடுங்கோபத்தில் இருப்பதாக தெரிவித்தார். ஆகையால் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதையெல்லாம் தாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
சின்னதா புள்ளி வைத்து விட்டுபோன பொன். ராதாகிருஷ்ணன்.. மண்டை காய்ந்து போன திராவிட கட்சிகள்.. பாஜக செம
திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய வேண்டும் என நினைப்பவர்களின் கனவு பலிக்காது என்றும் பாஜக, அதிமுகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதால் தங்கள் கூட்டணிக்கு வெற்றி உறுதி என கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.