உண்மையை பேசுங்க.. விவாதிக்கத் தயாரா?.. ஓபிஎஸ்ஸுக்கு மா சுப்பிரமணியன் சவால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் நெகட்டிவ் மூலம் கொடுக்காதற்கு நிதிச்சுமை காரணமல்ல, அனைத்து மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் முறையில் முடிவுகள் வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரகாண்ட் பிரதமர் நல நிதி மூலம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெறும் புதிய பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலைய தொடக்க விழா நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தர்மபுரியை சேர்ந்த காவலர் கடந்த ஜனவரி மாதம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து முகம் சிதைவிற்று உயிருக்கு போராடும் நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திறமையான மருத்துவர்கள் சிகிச்சையால் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

இந்தியா முழுவதும் 1222 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் 70 இடங்களில் திறக்கப்படுகிறது. 70 ஆக்ஸிஜன் ஆலைகள் மூலம் 6490 படுக்கைகளுக்கு 10 லிட்டர் ஆக்ஸிஜன் கிடைக்கும். தமிழகத்தில் புதிதாக 850 இடங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும் 800 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர்

நாமக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், திருப்பூர் மருத்துவ கல்லூரியில் மத்திய மருத்துவ குழுவினர் கூறிய குறைகள் சரி செய்யப்பட்ட ஆவணங்களுடன் மருத்துவ கல்வி இயக்குனர் டெல்லி சென்றுள்ளார். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆய்வு மேற்கொள்ள உடனடியாக மருத்துவ குழுவை அனுப்ப கோரிக்கை வைக்கிறார்.

தள்ளாட்டம்

தள்ளாட்டம்

தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால் அரசு மருத்துவமனையில் பிலிம் நெகட்டிவ் பிரிண்ட் போட முடியாத நிலை இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் நெகட்டிவ் மூலம் கொடுக்காதற்கு நிதிச்சுமை காரணமல்ல என கூறிய அவர் டிஜிட்டல் உலகம் என்பதால் வாட்ஸ் ஆப் மூலம் சரியான முடிவுகள் மருத்துவர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கூட எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் ரோல்களை வழங்குவதில்லை. தமிழக அரசை நிதிச் சுமையில் விட்டுச் சென்ற முன்னாள் துணை முதலமைச்சர் உண்மைத் தன்மை தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளம் மற்றும் ஊடகத்தில் வரும் செய்திகளை மட்டும் நம்பி எந்தவித விவரங்களையும் அறியாமல் 10 ஆண்டு காலம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுருப்பது தவறு.

 விவாதிக்க தயாரா

விவாதிக்க தயாரா

ஓபிஎஸ் நிதியமைச்சராக இருந்தபோது மருத்துவத் துறைக்கு ரூ. 19,420 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், தற்போதை திமுக ஆட்சியில் ரூ18,933 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார். கடந்த ஆட்சியை விட ரூ.487 கோடி மருத்துவ துறைக்கு நிதி குறைத்து ஒதுக்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆனால் நிதியறிக்கை தலைப்பு வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் எந்த தலைப்பின் கீழும் நிதி குறைக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து குளறுபடிகளையும் சரி செய்து வருகிறோம். பிபிஇ கிட், முககவசம், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவு உள்ளிட்டவற்றில் கூடுதலாக செலவு செய்து குளறுபடி நடைபெற்றுள்ளதை வெளிக் கொண்டுவந்துள்ளோம். சமூக வளைத்தலங்களில் வரும் செய்திகளை வைத்து ஓ.பன்னீர்செல்வம் அரசு மருத்துவமனைகள் மீது குறை கூறுவது நாகரீகமாக இல்லை. மருத்துவ துறைக்கு நிதி ஒதுக்கியதில் எவ்வித குறைபாடும் இல்லை. குறைபாடுகள் இருந்தால் நேரடியாக விவாதிக்க தயார் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+