பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது... புதிய சாதனை படைத்த உற்சாகத்தில் அமைச்சர் மூர்த்தி!
சென்னை: பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்துள்ளதால் புதிய சாதனை படைத்த உற்சாகத்தில் இருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
தமிழக அரசின் பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பத்திரபதிவு மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு ரூ.2,325 கோடி அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள தகவல் வருமாறு;

பதிவுத்துறை
பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக் கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.

ரூ.8,000 கோடி வருவாய்
அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணப் பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் எதிர்வரும் 28.09.2022 ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்கள். இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5,757 கோடியை விட ரூபாய் 2,325 கோடி அதிகமாகும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பதிவுத்துறை வருவாயை அதிகரித்திருப்பதன் மூலம் துறை ரீதியாக தனது நிர்வாகத் திறமையையும், ஆளுமையையும் ஆட்சி மேலிடத்திற்கு வெளிப்படுத்திவிட்ட உற்சாகத்தில் இருக்கிறார் அவர்.

அதிரடி ஆய்வு
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பதிவுத்துறை அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்துவதுடன் பொதுமக்களிடமும் குறைகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறார். அமைச்சர் மூர்த்தியிடம் தென்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தை கண்டு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் திகைத்து நிற்கின்றனர்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications