சென்னையில் 70 % இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. மீண்டும் எப்போது வரும்? அமைச்சர் பதில்
சென்னை: சென்னையில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியது. அதிதீவிர புயலாக நேற்று மாறிய நிவர். நள்ளிரவில் புதுவை அருகே கரையை கடந்தது. '
இதனால் நேற்று நள்ளிரவு தொடங்கி விடிய விடிய நாகப்பட்டினம் முதல் சென்னை வரை மிகமிக கனமழை பெய்தது. தாம்பரம், புதுச்சேரி, கடலூரில் அதிகபட்சமாக பெய்திருந்தது.

நேற்று துண்டிப்பு
இந்நிலையில் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்த காரணத்தால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்சாரம் நிறுத்தம்
தொடர்மழையைத் தொடர்ந்து நீர் தேங்கியுள்ளதால் மின்சார வாரியம் சென்னையில் மின்சாரத்தை துண்டித்தது. குறிப்பாக, தென் சென்னையில் வேளச்சேரி, தில்லை கங்கா நகர், எம்.ஜி.ஆர்., நகர். அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

வளசரவாக்கத்தில் மின்சாரம்
வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, கொருக்குப் பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. வளசரவாக்கம் பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர். மழை நின்றுவிட்டதால் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரினர்.

மின்சாரம் வரும்
மொத்தமாக சென்னையில் மின் இணைப்பு 390 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நீர் மெல்ல மெல்ல சென்னையில் வடிய தொடங்கி உள்ளதால் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது. இந்நிலையில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக சென்னையில் எல்லா இடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications