தமிழ்நாடு போல் பஞ்சாப் அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டம் போல் ஒரு சிறந்த திட்டம் இல்லை என்று பாராட்டியுள்ள பகவந்த் மான், 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது மிகப்பெரிய சாதனை என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன்பின் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய ஸ்டாலின், அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த காலை உணவு திட்டம் மூலமாக 34,987 பள்ளிகளைச் சேர்ந்த 17,53,257 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதும் சிறப்பான திட்டம். தமிழ்நாட்டைப் போல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டு உணவு தான் தேசிய உணவாக இருந்து வருகிறது. இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும், தென் மாநில உணவுகளே நிறைந்திருக்கின்றன.
காலை உணவுத் திட்டம் போல் ஒரு சிறந்த திட்டம் இல்லை என்று சொல்லுவேன். ஏனென்றால் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது மிகப்பெரிய சாதனை. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை முதல்வர் ஸ்டாலின் இங்கு கூறியதை மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன். ஆம் ஆத்மி கட்சி சாமானிய மக்களுக்கான கட்சி.
எப்போதும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பஞ்சாப் அரசு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. ஆம் ஆத்மி கிளினிக்குகளில் சுமார் 70 ஆயிரம் பேர் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதனை விரைவில் விரிவாக்கம் செய்ய உள்ளோம். அதேபோல் நாளையே பஞ்சாப் அமைச்சரவையில் காலை உணவுத் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளேன்.
பகத் சிங், ராஜகுரு உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்த மண்ணான பஞ்சாப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்தபின் செயல்படுத்திய இலவச பேருந்து பயணத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகியவை நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது திமுகவின் மற்றொரு திட்டமான காலை உணவுத் திட்டம் அடுத்ததாக பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை திமுகவினர் வரவேற்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திமுகவின் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக அமைந்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications