கொரோனா நிவாரணமாக 2000 வழங்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க விழுப்புரம் எம்பி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா கால நிவாரணமாக 2000 வழங்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 4000 கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. இதை இரு தவணைகளாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

எம்பி ராம்குமார்

எம்பி ராம்குமார்

அத்துடன் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2000 வழங்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என விழுப்புரம் ரவிக்குமார் எம்பி ராம்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா

கொரோனா

இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி பதிவிட்டுள்ள முகநூல்பதிவில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வருமானத்தை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மீட்பதற்கு நேரடியாக அவர்கள் கையில் உதவித்தொகையை வழங்குவதே சிறந்தது எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

அதற்கேற்ப ஆட்சிப் பொறுப்பேற்றதும் மே, ஜூன் மாதங்களில் மாதம் 2 ஆயிரம் என 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வாழ்வாதாரம் இழந்தோருக்கு அது பேருதவியாக உள்ளது.

பதிவு

பதிவு

இன்னும் கொரோனா பேராபத்து விலகாத நிலையில் அந்தத் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கவேண்டும் என வேண்டுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது பதிவில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+