Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் நீடிக்கும் மர்மம்.. இந்த கேள்விகளுக்கு விடை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளன. 100 பவுன் 200 பவுன், என்று நகைகள் திருட்டு போன வழக்கில் எல்லாம் காட்டாத அவசரத்தை 10 பவுன் நகைக்காக போலீஸ் காண்பித்தது ஏன்? யார் இந்த நிகிதா மற்றும் சிவகாமி? இவர்களின் பின்னணி என்ன?, மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார். 27 வயதே ஆன அஜித்குமார் அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 3 மாதங்களாக காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 27 ஆம் தேதி கோயிலுக்கு வந்த பெண் ஒருவரின் நகைகள் திருடு போன புகாரில், அஜித் குமாரை போலீசார் விசாரித்தனர்.

high court Tiruppuvanam sivagangai lockup death custodial death case Sivaganga Thiruppuvanam

பல்வேறு சந்தேகங்கள் உள்ளன

விசாரணையின் போது போலீசார் அஜித்குமாரை, தடியால் சரமாரியாக அடித்தனர். விசாரணைக்குப் பிறகு அஜித் குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சிவகங்கை மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அன்று இரவு உறவினர்களுக்கு போலீசார் போன் மூலம் பேசி, அஜித்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசாரால் அஜித் குமார் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

மேலும் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணையும் சிபிஐ வசம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

100 பவுன் 200 பவுன், என்று நகைகள் திருட்டு போன வழக்கில் எல்லாம் காட்டாத அவசரத்தை 10 பவுன் நகைக்காக போலீஸ் காண்பித்தது ஏன்? யார் இந்த நிகிதா மற்றும் சிவகாமி? இவர்களின் பின்னணி என்ன..?, மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன.

சாவியை ஒப்படைத்தது ஏன்?

* கோயிலுக்கு வந்த பெண்கள் 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..?
* மதுரையில் இருந்து 25 கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்த மகள் நிகிதா... பின் சீட்டில் நகை வைக்கப்பட்ட அந்த காரின் சாவியை... முன் பின் பழக்கம் இல்லாத 3ஆம் நபர் ஒருவரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனது ஏன்..?

* காரின் பின்பக்கத்தில் நகையை வைத்துக்கொண்டு முன்பின் தெரியாத காவலாளியிடம், காரின் சாவியை ஏன் ஒப்படைக்க வேண்டும். இத்தனைக்கும் தனக்கு கார் ஓட்டவே தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு கார் சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்..?

பார்க் செய்த அந்த 4வது நபர் யார்?

* காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு ஏன் அம்மா மகள் இருவருக்கும் அப்போது ஏற்படவே இல்லை?
* அஜித்திடம் சாவியை பெற்று காரை எடுத்து ஓட்டி பார்க் செய்த அந்த 4வது நபர் யார்.? நகை காணவில்லை என்றதும், நகைக்கு சொந்தக்காரர்கள், 7 கிமீ அருகேயுள்ள திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளூர் போலீசிடம் புகார் அளித்தார்களா..?

* 30 கிமீ தூரமுள்ள மானாமதுரையில் இருந்து யூனிஃபார்ம் அணியாமல் போலீஸ் தனிப்படை ஒன்று மடப்புரம் கோயிலுக்கு விசாரணைக்காக வந்தது ஏன்?
* அருகில் உள்ள திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்..?
* தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என முதலில் போலீசார் FIR போட்டது ஏன்..?

புகார் அளித்தவர்களின் பின்னணி என்ன?

* உயர் அதிகாரிகளின் உத்தரவின் படிதான், போலீசார் இதைப்போன்று சட்ட விரோதமான கொடூரத்தில் ஈடுபட்டதாக போலீசாரின் குடும்பத்தினர் தர்ணா போராட்டம் செய்தனர். அவர்கள் சொல்கிறபடியே வைத்து பார்த்தாலும் கீழ்நிலை காவலர்களுக்கு சட்ட விரோதக் ஆர்டர் போட்டது யார்? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கைதாகி சிறை செல்ல வேண்டிய அந்த உயர் அதிகாரிகள் யார்..?

* இதைவிட அதிகளவில்.. 100 பவுன் 200 பவுன்.. என்று நகைகள் திருடு போன வழக்கில் எல்லாம் மெத்தனம் காட்டும் போலீஸ்.. 10 பவுன் நகைக்காக போலீஸ் இத்தனை தீவிரமாக உடனடி நடவடிக்கையில் இறங்கியது ஏன்..?
* நகை திருடுபோனதாக புகார் அளித்தவர்களின் பின்னணி என்ன? என இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் நிலவுகின்றன. இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை தரவேண்டியது காவல்துறையின் பொறுப்பு..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+