டிச.23.. முக்கிய முடிவை எடுக்கும் ஓ பன்னீர் செல்வம்? பண்ருட்டி தலைமையில் நடக்கப்போகும் ஆலோசனை!
சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக்கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பின் அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். பாஜக உடன் இணக்கமான சூழ்நிலையிலும் இருந்த ஓ. பன்னீர்செல்வம், தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி கடந்த ஜூலை மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

என்.டி.ஏ கூட்டணியில் இணைகிறாரா?
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லிக்கு சென்ற ஓ. பன்னீர்செல்வம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பி.எஸ்., தனிக்கட்சி தொடங்கப்போவதாக நான் ஒருபோதும் கூறவில்லை என்றார்.
அதுமட்டும் இன்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து டிசம்பர் 15 ஆம் தேதி முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறிய நிலையில், அந்த கூட்டத்தையும் ரத்து செய்தார். இதனால் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளாரா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர டெல்லி பாஜக மேலிடம் விரும்புகிறது.
23 ஆம் தேதி கூட்டம்
இதனால், இருவரையும் சரிகட்டி கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 23 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நயினார் நாகேந்திரன்
டெல்லியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முகாமிட்டுள்ளார். நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரையும் நயினார் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தமிழக அரசியல் சூழல், கூட்டணி நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேச வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில்தான், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆலோசனைக் கூட்டத்தை 23 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார். அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். அப்போது பல்வேறு பரபரப்பு சந்திப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications