நீட் விலக்கு விவகாரம்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்கும் அண்ணாமலை.. என்ன காரணம் தெரியுமா
சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று இங்குள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. அதிமுக ஆட்சியிலேயே இது தொடர்பாகச் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை.

இதையடுத்து திமுக அரசு அமைந்ததும் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக உள்ளதாகவும் நீட் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக நாளை (பிப். 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார்.
Recommended Video
இந்தச் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநருக்கு அண்ணாமலை நன்றி தெரிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications