உடைத்து விட்டார் சுதா.. கண்களை குளமாக்கி விட்டார் சூர்யா.. ரசிகர்கள் சிலாகிக்கும் சூரரைப் போற்று!
சென்னை: சூரரைப் போற்று மூலம் ரசிகர்களின் கண்களை குளமாக்கிவிட்டார் சூர்யா என நெட்டிசன்கள் சிலாகித்து வருகிறார்கள்.
நடிகர் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று என்ற திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியானது. இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை பாடம் கற்று தந்த சூர்யாவை ரசிகர்கள் போற்றி சூர்யாவை போற்று என்ற ஹேஷ்டேக்கை டிரென்டிங்கில் வைத்துள்ளார்கள்.
வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. சாதியத்தின் மீது ஏரோப்பிளேனை இறக்கிய "சூரன்" சூர்யா.. வெல்டன்
தன்னம்பிக்கை
கண்களை குளமாக்கிவிட்டார் !
இப்படி ஒரு தன்னம்பிக்கை மிகுந்த கதையில் நடித்த
@Suriya_offl
சூர்யாவை போற்று !
புத்தக உணர்வுகள்
கேப்டன் கோபிநாத்தை படித்துவிட்டு படம் பார்க்கையில் ஏதோவொரு இடத்தில் சலிப்பு ஏற்பட்டுவிடுமோ, கதையை அதிகமாக மிகைப்படுத்தி வைத்துவிடுவாரோ என்று தோன்றியது.சுதா அதை உடைத்துவிட்டார். புத்தக உணர்வுகளை காட்சிகளாக கண்முன் நிறுத்தி அனுபவிக்க வைத்துவிட்டார்.
தன்னம்பிக்கை
கனவுகளை சுமந்து வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு இளைஞருக்கும் தன்னம்பிக்கை பாடம் நடத்தியிருக்கிறார் சூர்யா.
நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.
புகைப்பிடித்தலின் தீமையை சொன்னதற்கு சிறப்பு நன்றி
ஆயிரம் பேர்
உன்னால் முடியாது என ஆயிரம் பேர் கூறினாலும் தன்னால் முடியும் என நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்றுமே தோற்றதில்லை !
சூரரைப் போற்று இளைஞர்களின் எழுச்சி ஊற்று !
இப்படி ஒரு தன்னம்பிக்கை மிகுந்த கதையில் நடித்த
@Suriya_offl
சூர்யாவை போற்று !
ஏற்றத்தாழ்வு
"பொருளாதார ஏற்றத்தாழ்வை மட்டுமல்ல, கொடிய சாதிய ஏற்றத்தாழ்வையும் உடைத்தெறிய விரும்புகிறேன்"
:- மாறன் எனும் சூர்யா.
இதுக்காவே #சூரரைப்போற்று
முன்னேற்றம்
வாழ்க்கைல கஷ்டப்பட்டு முன்னேறனும்னு ஒருத்தன் நினைக்கவும் கூடாது, ஜெயிச்சிறவும் கூடாதுனு எப்பவுமே ஒரு கூட்டம், மேல் மட்டம் வேலை பாத்துட்டே இருக்கும்.அப்படி பட்ட ஒருத்தரோட கதைய இவ்வளவு அழகா எடுத்ததுக்கு #SudhaKongara வுக்கு வாழ்த்துக்கள்.
#சூரரைப்போற்று போற்றுதலுக்குரியதே.