இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா - முதல்வர் பழனிசாமி டிச. 28ல் ஆலோசனை
உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை: உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை நீட்டிக்கலாமா என்றும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 8 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு கோடி பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 95 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் சில மாவட்டங்களில் தொற்று உறுதியாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டாலும் இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா பரவி வருகிறது. அங்கிருந்து இந்தியா வந்துள்ள 20 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சளி மாதிரிகள் புனோவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய உருமாறிய கொரோனா பற்றி தமிழ் நாட்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்கலாமா, தளர்வுகளை அறிவிக்கலாமா என்றும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications