போதைப்பொருள்.. ஆயுதங்கள் கடத்தல்.. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியா? சென்னையில் என்ஐஏ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு கேரள கடற்கரையில் 300 கி.கி ஹெராயின் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு உதவி செய்யதான் இதுபோன்று ஆயுதம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சிதான் தற்போது நடைபெற்று வரும் என்ஐஏ ரெய்டு என்று சொல்லப்படுகிறது. இந்த ரெய்டில் ரெய்டில் ரூ.82 லட்சம் ரொக்கம், 1,000 சிங்கப்பூர் டாலர், 300 கிராம் தங்கம், 10 கி.கி கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications