5 மாநில தேர்தல்.. 22 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் எந்த மாற்றமும் இல்லை!
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தொடர்ந்து இன்றும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 22 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே வலையில் விற்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. சர்வதேச சந்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 69.36 டாலரை தொட்டது. 2.62 டாலர் இது உயர்ந்தது. இதன்பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது.
தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து 22 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இந்தியால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைதான் இதுவரை விற்கப்பட்டதிலேயே அதிக விலை ஆகும்.
தற்போது சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 87.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.