தமிழ்நாடே கடும் வறட்சியில இருக்கு.. ரூ1000 கோடி உடனே தாங்க... மத்திய அரசுக்கு ஒபிஎஸ் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்க ரூ1,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லி நிதி அமைச்சர்கள் மாநாட்டில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். காவிரி-கோதாவரி இணைப்புக்கு இந்த பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கஜா புயல் பாதிப்பு சீரமைப்புக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் முதல் பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டினை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்களை கேட்டு வருகிறார். இதேபோல் மாநிலவாரியாக இடம் பெற வேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசிக்க விரும்பினார். இதற்காக இன்று காலை நிதியமைச்சர் மாநாடு தொடங்கியது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்க ரூ1,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். காவிரி-கோதாவரி இணைப்புக்கு இந்த பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்க வேண்டும். ஆனைகட்டி குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அவசியம். கஜா புயல் பாதிப்பு சீரமைப்புக்கு மத்திய அரசு ரூ6000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்துக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 4 ஆயிரத்து 458 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications