ரைட்டு.. ”இந்தி திணிப்பை எதிர்ப்போம்” வெங்கய்யா நாயுடு திறந்துவைத்த கருணாநிதி சிலையில் கம்பீர வாசகம்!
சென்னை: இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்பன உள்ளிட்ட 5 வாசகங்கள் கருணாநிதி சிலையில் பொறிக்கப்பட்டு உள்ளன.
Recommended Video
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அமைக்கப்பட்ட 16 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாடு திறந்துவைத்தார்.
இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் குடும்பத்தினர், அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வெண்கல சிலை
ஓமந்தூரார் தோட்டத்தில் திறக்கப்பட்ட சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை வடிவிலேயே வடிவமைத்து இருக்கிறார்கள். 3 டன் களிமண் மற்றும் மற்றும் 2 டன் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த சிலையை சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார்.

பெரியார் அண்ணாவுக்கு நடுவே
கருணாநிதியின் இந்த புதிய சிலையே தமிழ்நாட்டில் உலோகத்தினால் அமைக்கப்படும் மிக உயரமான சிலை என கூறப்படுகிறது. இந்த சிலைக்கு ரூ.1.17 கோடி மதிப்பில் செலவிடப்பட்டு உள்ளது. சென்னை ஓமந்தூரார் தோட்டம் அருகே அண்ணா சாலை சிம்சன் அருகே தந்தை பெரியார் சிலையும், அதற்கு அருகே அண்ணா சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலையும் உள்ள நிலையில் இரண்டு திராவிட இயக்க தலைவர்கள் சிலைக்கு மத்தியில் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.

சாலையோரம் சிலை
இந்த சிலையை சாலைக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதிக உயரம் கொண்ட இந்த சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு வரலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ஓமந்தூரார் வளாகத்தில் சாலையோரம் வைக்க இறுதியாக முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தி திணிப்புக்கு எதிராக வாசகம்
இந்த சிலையில், கருணாநிதியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் "வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீர்வோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி" ஆகிய 5 வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications