விஸ்வரூபம் எடுக்கும் ஒற்றைத் தலைமை.. சசிகலாவை டிரம்கார்டாக பயன்படுத்துகிறாரா ஓபிஎஸ்?
சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்றால் அது சசிகலா நியமனத்தின் போது பொருந்தாது ஏன் என்ற கேள்விக்கு ஓபிஎஸ் மழுப்பலான பதிலையே கொடுத்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனும் பிரச்சினை கடந்த 5 நாட்களாக வெளிப்படையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியே தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஓபிஎஸ் மவுனத்தை கலைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒற்றை தலைமை என்பது தற்போது தேவையில்லாத ஒன்று. இதை நானோ எடப்பாடி பழனிச்சாமியோ விரும்பவில்லை.

பிரச்சினை
ஆனால் சிலர் வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்ட நிலையில் தற்போது புதிதாக பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

இரட்டை தலைமை
எனவே அதிமுகவுக்கு இரட்டை தலைமையே சரி என 20 நிமிடங்கள் அளித்த பேட்டியில் பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டார். அப்போது சசிகலா குறித்தும் ஓபிஎஸ் பேசியிருந்தார். அவர் கூறுகையில் சசிகலாவை நாங்கள் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் தேர்வு செய்தோம். அவ்வளவுதான் என்றார்.

நிரந்தர பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிச்சாமி மவுனமாக இருந்து வரும் நிலையில் ஓபிஎஸ்ஸோ பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா, புதிய பதவி உருவாக்கினால் அது அவருக்கு செய்யும் துரோகம் என்கிறீர்களே சசிகலாவை தேர்வு செய்யும் போது அது தெரியவில்லையா என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ்
அதற்கு ஓபிஎஸ், நேரடியாக எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் சிக்கலை ஏற்படுத்தும் கேள்விகளையே தொடர்ந்து கேட்கிறீர்களே என கூறி மழுப்பினார். தொடர்ந்து சசிகலா குறித்த கேள்விகளுக்கு அவர் எந்த பேட்டியிலுமே நேரடியாக பதிலளிப்பது இல்லை. மற்ற தலைவர்களை போல் சசிகலாவை அவர் விமர்சிப்பது இல்லை. செய்தியாளர்களின் கேள்விக்கு கூட நழுவுகிறார்.

ஒற்றை தலைமை
தொடர்ந்து ஒற்றை தலைமை பிரச்சினையை ஏற்படுத்தி தன்னை ஓரங்கட்ட நினைத்தால் சசிகலாவை நேரில் போய் சந்திப்பேன் என எடப்பாடி தரப்புக்கு ஓபிஎஸ் மிரட்டல் விடுத்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. சசிகலா உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை பிரச்சினையை கையிலெடுக்கிறார்கள்.

டிரம்கார்டு சசிகலா
மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு தனக்கு இல்லை என தெரிந்து கொண்ட ஓபிஎஸ், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சசிகலாவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்த போது ஓபிஎஸ் தற்போது கூறியது போல் தற்காலிக என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை என்றுதான் கே சி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூறுகிறார்கள். அப்படியிருக்க, சசிகலாவை ஓபிஎஸ் டிரம்கார்டாக (துருப்பு சீட்டு) பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
-
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது











Click it and Unblock the Notifications