எதிர்பார்க்காத ட்விஸ்ட்! தமிழக அரசின் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கும் பவன் கல்யாண் கட்சி
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை சென்னையில் பல்வேறு கட்சிகளும் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில், இதில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுக்க இப்போது 543 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. இருப்பினும், மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் சூழலில், அதற்கேற்ப லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையையும் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டிலிமிட்டேஷன் எனப்படும் தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு செய்யவுள்ளது.

இருப்பினும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தின் எண்ணிக்கை குறையலாம் என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதாவது மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் போது, நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.
சில காலத்திற்கு முன்பு வரை மக்கள்தொகை அதிகரிப்பு பிரச்சினை எனச் சொல்லி அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி சொல்லி மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தியது. அதைச் சிறப்பாகக் கையாண்டு மக்கள்தொகையைக் குறைத்த மாநிலங்களுக்கு இது தண்டனை போல ஆகிவிடும் என்பதே திமுகவின் வாதமாக இருந்தது.
இது தொடர்பாகத் தென் மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாளை வரும் மார்ச் 22ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு கட்சிகளுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் பாஜக- தெலுங்கு தேசம் கூட்டணியில் பவன் கல்யாண் இருக்கிறார். மேலும் மும்மொழி கொள்கை விவகாரத்தில் கூட அவர் திமுகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தே பேசி வருகிறார். இதற்கிடையே பெரிய ட்விஸ்ட்டாக தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்கிறது. இதற்காக ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் இன்றிரவு சென்னை வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications