சென்னை டூ தாய்லாந்து.. ஏர்போர்ட் வந்த இளைஞர்கள்.. செல்போன் மெசேஜை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள்
சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லக்கூடிய விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களை சோதனை செய்து விசாரித்த போது செல்போன் எஸ்எம்எஸ் காரணமாக பெரிய உண்மை தெரிய வந்துள்ளது. பெருங்களத்தூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி குறித்த விவரம் இருந்துள்ளது.
சென்னை விமான நிலையம் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் விமான நிலையம் ஆகும். எப்போதுமே விமானம் வந்த வண்ணம் இருக்கும், விமானம் எங்காவது சென்ற வண்ணம் இருக்கும். சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் விமானங்கள் அதிக அளவில் செல்கின்றன. நாள் தோறும் பல ஆயிரம் பேர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். விமான நிலையம் வரும் பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.

தாய்லாந்து விமானம்
அந்த வகையில் சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லக்கூடிய விமானத்தில் பயணம் செய்தற்காக வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களை சோதனை செய்து விசாரித்தபோது அவர்கள் பேச்சு, செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
குடியுரிமை அதிகாரிகள்
இதனால் சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் அதில் ஒரு நபரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, இளம்பெண்ணின் புகைப்படத்தை ஒருவருக்கு அனுப்பி இந்த பெண்ணை தீர்த்துக்கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து எந்த நபருக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது என விசாரித்த போது அவருடன் பயணம் செய்ய வந்த மற்றொரு நபருக்கு அந்த குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது.
பெருங்களத்தூர் மாணவி
மேலும் விசாரித்ததில் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது, இதையடுத்து இருவரின் பயணத்தை ரத்து செய்து பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்திற்கு குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலையம் வந்த பீர்க்கன்கரணை போலீசார் 2 பேரையும் பீர்க்கன்கரணை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தன்ராஜ் (வயது 21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான விக்னேஷ் (25) என்பது தெரிய வந்தது.
ஒரு தலைக்காதல்
மேலும் தன்ராஜ் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை 2 வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததும், அதை அந்தப் பெண் ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தன்ராஜ் பெண்ணை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 இளைஞர்களையும் பீர்க்கன்கரணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications