பெட்ரோல் பங்க் பரிதாபங்கள்.. கோபி சுதாகருக்கு செம்ம கன்டென்ட் கிடைச்சிருக்கு.. வீடியோக்களை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற புதிய அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. நேற்று இரவு சென்னையில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் வாங்கினார்கள். சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்கவே இதுதான் நிலைமை. இது தொடர்பாக வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், பரிதாபங்கள் யூடியூப் சேனல் வைத்துள்ள கோபி சுதாகருக்கு செம்ம கன்டென்ட் கிடைச்சிருக்கு என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன் ஒருவர் கூறுகையில், சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற புதிய அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. நேற்று இரவு சென்னை வேளச்சேரியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்குக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல விழுப்புரம் நகரம், சூரப்பட்டு, கெடார், அரியலுார் திருக்கை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த பதற்றம் உருவாகி வருகிறது.

Petrol pump parithapangal Gopi Sudhakar has got good content Watch the videos

முறையான தகவல்கள் இல்லாமல் பரப்பப்படும் வதந்திகளால் ஏற்படும் பதற்றம் நெருக்கடியை மேலும் அதிகமாக்கும் அபாயம் உள்ளது. இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல் உள்ளிட்ட தொழில்களும் எரிவாயு சார்ந்து இயங்கும் பிற தொழில்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றது உண்மைதான்.

எனினும் தற்சமயம் பெட்ரோல் டீசல் கட்டுப்பாடு உருவாகவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் நேற்றே விளக்கம் கொடுத்துள்ளன. எனவே மக்கள் தேவையற்ற பதற்றங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் அது நிலைமையை மேலும் மோசம் ஆக்கிவிடும் அபாயம் உள்ளது." என்று கூறியுள்ளார். அவர் பகிர்ந்த வீடியோவில் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் குவிந்து இருந்தார்கள்.

இன்னொரு நெட்டிசன், என்ன சுதாகர் கோபி இந்த வார பரிதாபங்கள் கன்டென்ட் சிக்கிருச்சு போல!! என்று கேட்டு வீடியாவை பரப்பி இருந்தார். கேன்களில் மொத்தமாக மக்கள் பெட்ரோல் டீசல் வாங்கி சென்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

மூன்றாவதாக ஒரு நெட்டிசன் பகிர்ந்த வீடியோவில், தண்ணீர் கேனில் பெட்ரோல் வாங்கி சென்றுள்ளார். அதேபோல் இன்னொரு வீடியோவில் கும்பகோணத்தில் ஏராளமானோர் நள்ளிரவில் காத்திருப்பதாக வீடியோவில் இருக்கிறது.கும்பகோணம் மட்டுமல்ல,, தமிழ்நாடு முழுக்கவே இதுதான் நேற்று இரவு நிலைமையாக இருந்தது.

ஒரே நேரத்தில் பலரும் வந்ததால், பெட்ரோல் பங்குகளில் கூட்ட நெரிசல் மிகஅதிகமாக இருந்தது. கோபி சுதாகர் ஆகியோர் இந்த பிரச்சனையை எப்படியும் பரிதாபங்களில் பேசுவார்கள் என்பதால், செம்ம கன்டென்ட் கிடைத்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+