வெறும் 22 வயசுதான்.. ஆனால் பிரியங்கா செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்!
ரயில்களில் பணம், நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: பிரியங்காவுக்கு வயசு வெறும் 22தான்.. ஆனால் செய்ற காரியம் ஒவ்வொன்னும் போலீசாரை அதிர வைத்துள்ளது.
பஸ்ஸில் பிக்பாக்கெட் நடக்கும்.. ஆனால் ரயில் பிக்பாக்கெட்டில் கைதேர்ந்தவர்தான் இந்த பிரியங்கா. கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் எலக்ட்ரிக் ரயில்களில் பெண்கள் பெட்டியில் வழக்கமாக ஏறி கொள்வார் பிரியங்கா.

அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அல்லது நெருக்கமாக நின்று கொண்டு, நகை பணம், பர்ஸ்களை கொஞ்ச நேரத்தில் அடித்து விடுவார்.
பயணிகள் பர்ஸை காணோம், செல்போனை காணோம் என்று தொடர்ந்து போலீசில் புகார் சொன்னார்கள். இது சம்பந்தமாக போலீசாரும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அதே எலக்டரிக் ரயிலில் பிரியங்கா இன்னொரு பெண் பயணியிடம் வேலையை காட்டி உள்ளார். இதை அங்கிருந்த சகபயணிகள் பார்த்துவிட்டனர். அதற்கு பிறகுதான், தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் கையும் களவுமாக கொண்டு போய் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில்,பிராட்வே பகுதியை சேர்ந்தவராம் பிரியங்கா.. 22 வயதாகிறது என்கிறார். இவருக்கு திருடுவதுதான் பொழப்பாம்.. அவரிடம் சோதனை செய்தபோது, பயணிகளிடம் இருந்து அப்போது ஆட்டைய போட்டிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு சவரன் வளையல், நான்கு செல் போன்கள் இருந்தன.. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பிரியங்காவையும் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications