2 நாள் தமிழ்நாடு பயணத்தில் அரசியல் பேசாத பிரதமர் நரேந்திர மோடி.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி, பெரியளவில் அரசியல் பேசாதது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆளுங்கட்சியான திமுகவையோ அல்லது மறைமுகமாக உதயநிதி ஸ்டாலினையோ பிரதமர் மோடி விமர்சிக்கவில்லை. இதுகுறித்த பின்னணி என்ன என்பது தொடர்பாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி புதிய விமான நிலைய விரிவாக்கக் கட்டடத்தைத் திறந்து வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல் கங்கைகொண்ட சோழபுரம் வந்த அவர், சோழீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தியதோடு, ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவிலும் பங்கேற்றார்.

இதற்கிடையே திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரதமர் மோடி சுமார் 9 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். ஏப்ரல் மாதம் ராமேஸ்வரம் வந்த மோடி, தற்போது ஜூலை மாதத்தில் மீண்டும் தமிழ்நாடு வந்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழக பயணம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த 2 நாள் பயணத்தில் மோடி பெரியளவில் அரசியல் பேசவில்லை. கடந்த 10 ஆண்டுக் கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி கொடுத்துள்ளோம். இந்த தொகை முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விடவும் 3 மடங்கு அதிகம். அதேபோல் 11 ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளோம் என்று பேசி இருந்தார்.
ஆடி திருவாதிரை விழாவில் கூட ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசிய மோடி, திமுக பற்றிப் பேசவில்லை. பிரதமர் மோடி அரசியல் பேசாமல் அமைதி காத்திருப்பது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை விட்டு விலகியது. ஆனால் தற்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
வழக்கமாகப் பிரதமர் மோடி பேசும் டபிள் இன்ஜின் ஆட்சி, பாஜக கூட்டணி ஆட்சி என்ற எந்த வார்த்தைகள் கூட இந்த 2 நாள் பயணத்தில் இடம்பெறவில்லை. இதற்குப் பிரதமர் மோடி பங்கேற்றது அரசு விழா என்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழக அரசு தரப்பிலும் கடந்த சில மாதங்களாகப் பிரதமர் மோடி மீது பெரியளவில் விமர்சனம் வைக்கப்படவில்லை என்றும் பார்க்கப்படுகிறது.
அதேபோல் தமிழக அரசியலை முழுக்க முழுக்க அமித்ஷா கையில் வைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமித்ஷா பொறுப்பை எடுத்துக் கொண்டிருப்பதால், பிரதமர் மோடியின் அடுத்தடுத்த பயணங்கள் வேறு மாதிரி வடிவமைக்கப்படும் என்றும் பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு 6 மாதங்கள் குறைவாக இருக்கும் போது, மோடியின் அரசியல் பேச்சுகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications