தேவர் குரு பூஜை.. யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க.. பிரதமர் மோடி வரவில்லைங்க.. அண்ணாமலை விளக்கம்
சென்னை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பசும்பொன்னிற்கு வரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க வரும் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பசும்பொன் வருகிறார் என தவறான தகவல் பரவி வருகிறது. அது போல் அவர் பசும்பொன்னிற்கு வரவில்லை.
எங்கிருந்து இப்படி ஒரு தகவல் பரவியதோ தெரியவில்லை. பிரதமர் வருவதாக இருந்தால் 2 மாதங்கள் முன்பே அது தீர்மானிக்கப்படும். திடீரென தீர்மானிக்க முடியாது.

தேவர் குரு பூஜை
அடுத்த வருடம் தேவர் குரு பூஜைக்கு பிரதமருக்கு அழைப்புவிடுப்போம். மேலும், அனைத்து குரு பூஜைகளும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பது பாஜக விருப்பம். இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் இந்தியை திணித்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக இந்தி திணிப்பை வேடிக்கை பார்த்தது.

3 மொழிகள்
3 மொழிகளை கற்க வேண்டும் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கை. இந்தியை தமிழகத்தில் மத்திய அரசு திணித்தால் தமிழக பாஜக எதிர்க்கும். திமுகவின் கபடநாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பாக நடைபெற்றது.

112 பரிந்துரைகள்
இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதுகுறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

உண்மை என்ன
அது போல் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி பசும்பொன் வருகிறார் என்ற தகவல் வெளியானது. பிரதமராக 8 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மோடிக்கு இப்போதுதான் தேவர் ஜெயந்தி விழா தெரிகிறதா, எல்லாம் முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து இந்த நாடகம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை தேவர் ஜெயந்தியில் வைத்து பிரதமர் மோடி அறிவிப்பதாகவும் ஒரு தவறான தகவல் கசிந்தது நினைவுக்கூரத்தக்கது.
-
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக












Click it and Unblock the Notifications