இப்படித்தான் வடமாநிலத்தவர்கள் இங்கே அரசு வேலைக்கு வர்றாங்களா? பகீர் கிளப்பும் மோசடி: ராமதாஸ் ஆவேசம்!
சென்னை: சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் ப்ளூடூத் கருவியை பயன்படுத்தி மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கேண்டீன் அசிஸ்டண்ட் மற்றும் டிரைவர் வேலைக்கு காலி பணியிடங்கள் இருந்தன. இதற்கு 10 அல்லது 12ஆம் வகுப்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என சுங்கத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. 17 காலி பணியிடங்களுக்கு சுமார் 12 ஆயிரம் விண்ணப்பித்திருந்தனர். 30 ஆயிரம் சம்பளம் மற்றும் சென்னையிலேயே வேலை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த தேர்வில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு நடந்து கொண்டிருந்த போது ஒரு இளைஞர் வித்தியாசமாக நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் சிறிய அளவிலான புளூடூத் கருவியை காதில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரிடம் நடத்திய சோதனையில் அவர் வயிற்றில் சிம்கார்டு போடும் கருவியை ஒட்டி, அதனை பயன்படுத்தி வெளி நபரின் உதவியுடன் தேர்வு எழுதியது தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 30 பேர் இவ்வாறு தேர்வு எழுதுகின்றனர் என்ற தகவலை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பான 30 பேரிடமும் விசாரணை நடைபெற்று அவர்களிடம் இருந்து புளூடூத் மற்றும் சிம்கார்டு கருவி பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நடந்த தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நூதன முறையில் மோசடியாக தேர்வு எழுதியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கொந்தளித்துள்ளார். கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கடைநிலைப் பணிகளுக்கு 17 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற போட்டித் தேர்வில், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தி வெளியிலிருந்து விடைகளை கேட்டு எழுதியதாக 29 பேரும், ஆள் மாறாட்டம் செய்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் 26 பேர் ஹரியானாவையும், தலா இருவர் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அஞ்சல்துறை பணிக்கான தமிழ்மொழி போட்டித் தேர்வில் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறாத நிலையில், அனைத்து இடங்களுக்கும் தமிழே தெரியாத ஹரியானா மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வட இந்தியர்கள் மோசடியின் மூலமாகவே வெற்றி பெறுகிறார்களா? என்ற ஐயம் எழுந்திருந்தது. இதை நானும் கடந்த காலங்களில் பலமுறை குறிப்பிட்டிருந்தேன். இப்போது மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த ஐயம் வலுவடைந்திருந்தது.
அரசுப் பணிகள், குறிப்பாக மத்திய அரசு பணிகள், குதிரைக் கொம்பாக மாறி வரும் நிலையில், அந்த பணிகளில் தகுதியானவர்களும், திறமையானவர்களும், உள்ளூர் மக்களும் அமர்த்தப்படுவதற்கு பதிலாக, பணியிடங்களுடன் சிறிதும் தொடர்பில்லாத சிலர் மோசடியான வழிகளில் அந்த வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வது மிகப்பெரிய குற்றம் ஆகும். தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவர்களால் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த மோசடியின் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளுக்காக கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100% பணிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications