ராமதாஸ் எடுத்த புது அஸ்திரம்.. அரசுக்கு வைத்த கோரிக்கை.. ஏற்பாரா எடப்பாடியார்.. செம்ம திருப்பம்!
சென்னை: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட காலமாகவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுமே நடைமுறைப்படுத்தவில்லை..
கடந்த சட்டசபை தேர்தலில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியுடன் தேர்தலை எதிர்கொண்டது திமுக. ஆனால் அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது.

திமுக தோல்வி
இதில் அதிமுகவின் கோரிக்கைக்குத்தான் ஆதரவு அதிகமாக கிடைத்தது. ஆம் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதாக சொன்ன அதிமுக ஆட்சியை பிடித்தது.,ஆனால் ஒரேடியாக மதுவிலக்கை கொண்டுவருவதாக சொன்ன திமுக தோல்வியை தழுவியது. திமுகவின் தோல்விக்கு மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் பிரித்தது ஒரு பக்கம் என்றால், மதுப்பிரியர்களின் வாக்குகள் முக்கியமான காரணமாக இருக்கலாம் என்றும் அப்போது பேசப்பட்டது.

500 கடைகள் மூடல்
இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, பதவி ஏற்ற உடனே 500 டாஸ்மாக்குகளை மூட உத்தரவிட்டார். படிப்படியாக ஐந்து வருடத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாகவும் உறுதி அளித்தார். டாஸ்மாக் வருமானத்தை வேளாண் உற்பத்தி, கனிம வளங்கள் உள்பட வேறு வகையில் எடுக்கவும் வழிவகைகளை உருவாக்கப்போவதாக கூறியிருந்தார். மதுக்கடைகளின் நேரத்தையும் குறைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா உடல் நலக்குறைவால் 2016ம் ஆண்டே மரணம் அடைந்தார்.

பாமக கோரிக்கை
அதன்பிறகு அவரது வழியில் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இன்னும் இரண்டு மாதத்தில் ஐந்து வருட அதிமுக ஆட்சி நிறைவு பெறுகிறது. இப்படியான சூழலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக மதுவிலக்கை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

மதுவிலக்கு நடைமுறை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இவரது கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை எடுப்பாரா அல்லது தேர்தல் வாக்குறுதியாக புதிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
-
டாஸ்மாக்கில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு.. குடிமகன்களுக்கு ஷாக்.. தேர்தலையொட்டி அதிரடி -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications