சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி பிரச்சனை..பழைய கணக்கை வச்சு ஓட்டிக்கிட்டுருக்கோம்.. கொதித்த அன்புமணி
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதிப் பிரச்சனை. இதன் மூலம் இடஒதுக்கீடு வரும் சாதியை வைத்துதான் நூறாண்டுகளாக அடக்குமுறை நடந்தது. அதை சரிசெய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பது பொய். இப்போது எல்லாமே விரல் நுனியில் இருக்கிறது. ஒரு பழைய கணக்கை வைத்துக் கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது டிவி கூட கிடையாது. பிளாக் அண்ட் ஒயிட் டிவி கூட கணக்கெடுப்பின்போது கிடையாது. அம்பாசிடர் கார் கூட அப்போது வரவில்லை. அந்தக் கணக்கெடுப்பை வைத்துக் கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளுக்கு படிப்பு, வேலை, கடன், சுயவேலை கொடுப்பதற்காக பழைய கணக்கெடுப்பை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
புதிய கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். இந்த சமூகங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சமூகங்களும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் தான் நீங்கள் சமூகநீதியை நிலைநாட்ட முடியும். இல்லையெனில் எதை வைத்து நீங்கள் சமூகநிதியை நிலைநாட்டுவீர்கள்.
இதில் பல காரணங்கள் இருக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எடுப்பார்கள். எங்களது அழுத்தம் காரணமாக பிரதமர் மோடியிடம் பல முறை அழுத்தம் கொடுத்த நிலையில், 2027 இல் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
1931க்குப் பிறகு முதல்முறையாக இந்திய அளவிலே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்ற அரசு இப்போது இருக்கும் அரசு. இதற்காக 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் மாற்றம் கிடையாது. சாதிவாரி கணக்கெடுக்கெடுப்பு ஒரு சமூகநீதிப் பிரச்சனை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும் என்றுதான் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறோம் என்று கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications