சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி பிரச்சனை..பழைய கணக்கை வச்சு ஓட்டிக்கிட்டுருக்கோம்.. கொதித்த அன்புமணி
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதிப் பிரச்சனை. இதன் மூலம் இடஒதுக்கீடு வரும் சாதியை வைத்துதான் நூறாண்டுகளாக அடக்குமுறை நடந்தது. அதை சரிசெய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பது பொய். இப்போது எல்லாமே விரல் நுனியில் இருக்கிறது. ஒரு பழைய கணக்கை வைத்துக் கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது டிவி கூட கிடையாது. பிளாக் அண்ட் ஒயிட் டிவி கூட கணக்கெடுப்பின்போது கிடையாது. அம்பாசிடர் கார் கூட அப்போது வரவில்லை. அந்தக் கணக்கெடுப்பை வைத்துக் கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளுக்கு படிப்பு, வேலை, கடன், சுயவேலை கொடுப்பதற்காக பழைய கணக்கெடுப்பை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
புதிய கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். இந்த சமூகங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சமூகங்களும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் தான் நீங்கள் சமூகநீதியை நிலைநாட்ட முடியும். இல்லையெனில் எதை வைத்து நீங்கள் சமூகநிதியை நிலைநாட்டுவீர்கள்.
இதில் பல காரணங்கள் இருக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எடுப்பார்கள். எங்களது அழுத்தம் காரணமாக பிரதமர் மோடியிடம் பல முறை அழுத்தம் கொடுத்த நிலையில், 2027 இல் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
1931க்குப் பிறகு முதல்முறையாக இந்திய அளவிலே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்ற அரசு இப்போது இருக்கும் அரசு. இதற்காக 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் மாற்றம் கிடையாது. சாதிவாரி கணக்கெடுக்கெடுப்பு ஒரு சமூகநீதிப் பிரச்சனை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும் என்றுதான் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறோம் என்று கூறினார்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க












Click it and Unblock the Notifications