பப்ஜி மதனின் அடாவடி.. தோண்ட தோண்ட உடையும் சீக்ரெட்ஸ்.. உடந்தையாக இருந்த "தோழிகள்".. விரைவில் கைது
சென்னை: பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மதனின் நண்பர்களை கைது செய்யும் முடிவில் போலீஸ் உள்ளது. முக்கியமாக அவரின் தோழிகள் சிலரும் இதில் சிக்க வாய்ப்புள்ளது.
Recommended Video
பப்ஜி மதன் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிரைம் போலீசார் இவரை தருமபுரியில் கைது செய்தனர். யூடியூபில் மிகவும் பிரபலமான கேம்மரான மதன் மீது கடந்த சில நாட்களாக கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
சேனலில் வீடியோ பார்க்கும் பெண்களை லைவிலேயே மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் பேசி சர்ச்சையானர். அதோடு பள்ளி சிறுமிகளிடமும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசி இருக்கிறார். சில பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.
மதன்
இந்த நிலையில் தற்போது மதனின் நண்பர்களை கைது செய்யும் முடிவில் போலீஸ் உள்ளது. பப்ஜி மதன் கேம் விளையாடும் போது பெண்களிடம் தவறாக மட்டும் பேசவில்லை. இவர் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறான், பெண்களின் ஆபாச வீடியோக்களை விற்று இருக்கிறார். சிறுமிகளின் வீடியோக்களை விற்பனை செய்துள்ளார்.
டெலிகிராம்
இதற்காக டெலிகிராமில் பெரிய குழுவே இயங்கி இருக்கிறது. பப்ஜி மதன் இதை எல்லாம் தனியாக செய்யவில்லை. இவரின் மனைவி கிருத்திகா ஒரு பக்கம் இவர்களுக்கு கூட்டாக இருந்துள்ளனர். இன்னொரு பக்கம் பல நண்பர்கள் இவர்களின் டீமில் இருந்துள்ளனர். பெரிய கும்பல்தான் இந்த மோசடிகள் அனைத்தையும் செய்துள்ளது.
மனைவி
பப்ஜி மதன் மனைவி கிருத்திகா ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் தோழிகள் சிலரும் கைது செய்யப்பட உள்ளனர். அதேபோல் பப்ஜி மதனின் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் வெளியே பல்வேறு பணிகளை "கவனித்துக்" கொண்ட நண்பர்களும் கைது செய்யப்பட உள்ளனர்.
தோழிகள்
பப்ஜி மதன் எல்லா இடங்களிலும் தன்னுடைய பழைய புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தினார். அவர் வெளியே கூட பெரிதாக தலைகாட்டவில்லை. வெளியே பல்வேறு பணிகளை பப்ஜி மதனின் நண்பர்கள்தான் வெளிப்படையாக செய்தனர். இதனால் அவர்களை கைது செய்யும் முடிவில் உள்ளனர்.
ஆடியோ
பாலியல் ரீதியாக ஆபாச வீடியோக்களில் மோசடி செய்தது மட்டுமின்றி க்ரிப்டோ கரன்சி மூலமும் இவர்கள் மோசடி செய்துள்ளனர். அதேபோல் ஹோட்டல் ஒன்றை நடத்தியும் மோசடி செய்துள்ளனர். இதனால் பப்ஜி மதனின் கைது கடைசியாக இருக்காது, இவர் மூலம் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.