விளக்கத்தை ஏற்க மறுப்பு.. திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நாளை (15ம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நாளை (15ம் தேதி) காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு எதிராக திமுகவுக்கு சென்னை தேனாம்பேட்டை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் காணொளி காட்சி மூலம் கூட்டத்தை நடத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளுக்கு உட்பட்டு கூட்டம் நடக்கும் என திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் விளக்கத்தை ஏற்க மறுத்த காவல்துறை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை நாளை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நோய் தொற்று ஏற்படும் சூழலால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications