ரூம் போட்டோம்.. அப்ப வீடியோ எடுத்தார்.. இப்ப மிரட்டுகிறார்.. வாலிபர் மீது.. மயிலை பெண் பகீர் புகார்!
தன்னை ஏமாற்றிய காதலன் மீது இளம்பெண் போலீசில் புகார் தந்துள்ளார்
சென்னை: "லாட்ஜில் ரூம் போட்டோம்... ஜாலியாக இருந்தோம்.. அப்போ எனக்கு தெரியாம அதை வீடியோ எடுத்துட்டார்.. இப்ப மிரட்டுகிறார்" என்று தன்னை ஏமாற்றிய நபர் மீது மயிலாப்பூர் இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தந்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பெண் அவர்.. 25 வயதாகிறது... இவர் மகளிர் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்துள்ளார்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் பெண்ணை விசாரித்தனர். அப்போது அவர் சொன்னதாவது:

நான் ராமசந்திரன் என்பவரை காதலித்தேன்.. அவர் தேனாம்பேட்டையை சேர்ந்தவர்.. 29 வயதாகிறது.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.. அவரும் என்னை காதலித்தார்.. கல்யாணம் செய்து கொள்வதாகவும் சத்தியம் செய்தார்.
அதை நம்பி, அவருடன் காதலிக்கும்போது பல இடங்களுக்கு சென்றேன்.. லாட்ஜ்களிலும் ரூம் எடுத்து தங்கினோம்.. ஜாலியாக இருந்தோம்.. ஆனால் அதை எனக்கு தெரியாமல் ராமச்சந்திரன் செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் அவர் என்னுடன் பேசுவதை தவிர்த்தார்.. அதை பற்றி நான் கேட்டபோது, தனக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது, இனிமேல் நாம் பிரிந்துவிடுவோம் என்று கேஷுவலாக சொல்கிறார்.. ஆனாலும் என்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி அவரை கட்டாயப்படுத்தினேன்.. அதற்கு அவர், நாம லாட்ஜில் இருந்த போது எடுத்த வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
மேலும், இதோடு போய் விடு, தொந்தரவு செய்தால் கொலை கூட செய்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார்.. அவர் சும்மா மிரட்டுகிறார் என்றுதான் நினைத்தேன்.. ஆனால் சொன்ன மாதிரியே அந்தரங்க வீடியோ, போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டார" என்று கதறி அழுதபடி சொன்னார்... இதையடுத்து போலீசார் ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications